<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8454386457003410740</id><updated>2011-09-20T02:39:23.571+05:30</updated><category term='பாகம் 1 அத்தியாயம் 1'/><category term='பாகம் 1 அத்தியாயம் 3'/><category term='அறிவிப்பு'/><category term='பாகம் 1 அத்தியாயம் 2'/><title type='text'>சாண்டில்யனின் கடல்புறா</title><subtitle type='html'>சாண்டில்யனின் ‘கடல் புறா' நாவலை இணையத்தில் கொண்டு வரும் ஒரு முயற்சி</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kadalpuraaonnet.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kadalpuraaonnet.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சாண்டில்யனின் கடல் புறா</name><uri>http://www.blogger.com/profile/06325221355342866226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp2.blogger.com/_u7jmTj9z2U4/SDa6sr08-4I/AAAAAAAAAA4/pRTmmvlowKg/S220/30842.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>9</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8454386457003410740.post-7613026326211279260</id><published>2009-05-03T06:01:00.000+05:30</published><updated>2009-03-05T08:05:58.117+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகம் 1 அத்தியாயம் 3'/><title type='text'>கடல் புறா 1 - அத்தியாயம் 2 - எத்தனை படைக்கலங்கள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC55hJ2EII/AAAAAAAAAC0/5hBcNfllWE4/s1600-h/51.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 275px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC55hJ2EII/AAAAAAAAAC0/5hBcNfllWE4/s400/51.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305444758845788290" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC55TtvuhI/AAAAAAAAACs/oT_6cvva3F4/s1600-h/52.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 297px;" src="http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC55TtvuhI/AAAAAAAAACs/oT_6cvva3F4/s400/52.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305444755238271506" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC55ICd4mI/AAAAAAAAACk/adxf3vQx77M/s1600-h/54.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 295px;" src="http://4.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC55ICd4mI/AAAAAAAAACk/adxf3vQx77M/s400/54.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305444752103957090" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC54uzbHEI/AAAAAAAAACc/EWvtxfPcGQA/s1600-h/56.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 295px;" src="http://4.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC54uzbHEI/AAAAAAAAACc/EWvtxfPcGQA/s400/56.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305444745329974338" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC54RX2k5I/AAAAAAAAACU/TR3yBU2HNvM/s1600-h/58.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 303px;" src="http://2.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC54RX2k5I/AAAAAAAAACU/TR3yBU2HNvM/s400/58.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305444737429705618" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC6R76VhSI/AAAAAAAAADE/mBJ0r_31EA8/s1600-h/60.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 302px;" src="http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC6R76VhSI/AAAAAAAAADE/mBJ0r_31EA8/s400/60.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305445178345358626" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC6R5-m9WI/AAAAAAAAAC8/76liFO7Im0o/s1600-h/62.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 267px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC6R5-m9WI/AAAAAAAAAC8/76liFO7Im0o/s400/62.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305445177826407778" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8454386457003410740-7613026326211279260?l=kadalpuraaonnet.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalpuraaonnet.blogspot.com/feeds/7613026326211279260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8454386457003410740&amp;postID=7613026326211279260' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/7613026326211279260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/7613026326211279260'/><link rel='alternate' type='text/html' href='http://kadalpuraaonnet.blogspot.com/2009/02/1-2_22.html' title='கடல் புறா 1 - அத்தியாயம் 2 - எத்தனை படைக்கலங்கள்!'/><author><name>சாண்டில்யனின் கடல் புறா</name><uri>http://www.blogger.com/profile/06325221355342866226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp2.blogger.com/_u7jmTj9z2U4/SDa6sr08-4I/AAAAAAAAAA4/pRTmmvlowKg/S220/30842.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SaC55hJ2EII/AAAAAAAAAC0/5hBcNfllWE4/s72-c/51.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8454386457003410740.post-6138747835422274064</id><published>2009-02-21T17:11:00.000+05:30</published><updated>2009-02-21T20:42:43.430+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகம் 1 அத்தியாயம் 2'/><title type='text'>கடல் புறா 1 - அத்தியாயம் 2 - அசைந்த திரை! அஞ்சன விழிகள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ2cmvid9WI/AAAAAAAAABU/F8cmlbAMvHc/s1600-h/1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 274px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ2cmvid9WI/AAAAAAAAABU/F8cmlbAMvHc/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5304568125522310498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ2cm5OL-sI/AAAAAAAAABc/dsNF70KgmTA/s1600-h/2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 296px;" src="http://2.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ2cm5OL-sI/AAAAAAAAABc/dsNF70KgmTA/s400/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5304568128121600706" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ2cm2A-gMI/AAAAAAAAABk/J-nxX6OJ8kE/s1600-h/3.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 295px;" src="http://1.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ2cm2A-gMI/AAAAAAAAABk/J-nxX6OJ8kE/s400/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5304568127260885186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ2cnFekZkI/AAAAAAAAABs/1v26QqtUwqU/s1600-h/4.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 297px;" src="http://4.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ2cnFekZkI/AAAAAAAAABs/1v26QqtUwqU/s400/4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5304568131411535426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ5Tpd2wjQI/AAAAAAAAAB0/onW_vhAuGsA/s1600-h/5.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 296px;" src="http://2.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ5Tpd2wjQI/AAAAAAAAAB0/onW_vhAuGsA/s400/5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5304769382943067394" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ5Tpe0kmdI/AAAAAAAAAB8/08Rc0az-GII/s1600-h/6.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 292px;" src="http://2.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ5Tpe0kmdI/AAAAAAAAAB8/08Rc0az-GII/s400/6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5304769383202331090" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ5TpYE8MOI/AAAAAAAAACE/OJrwcp6gmdQ/s1600-h/7.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 301px;" src="http://2.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ5TpYE8MOI/AAAAAAAAACE/OJrwcp6gmdQ/s400/7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5304769381391937762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ5TpnvMBrI/AAAAAAAAACM/v1ws9_sPKms/s1600-h/8.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 268px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ5TpnvMBrI/AAAAAAAAACM/v1ws9_sPKms/s400/8.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5304769385595668146" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8454386457003410740-6138747835422274064?l=kadalpuraaonnet.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalpuraaonnet.blogspot.com/feeds/6138747835422274064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8454386457003410740&amp;postID=6138747835422274064' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/6138747835422274064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/6138747835422274064'/><link rel='alternate' type='text/html' href='http://kadalpuraaonnet.blogspot.com/2009/02/1-2.html' title='கடல் புறா 1 - அத்தியாயம் 2 - அசைந்த திரை! அஞ்சன விழிகள்!'/><author><name>சாண்டில்யனின் கடல் புறா</name><uri>http://www.blogger.com/profile/06325221355342866226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp2.blogger.com/_u7jmTj9z2U4/SDa6sr08-4I/AAAAAAAAAA4/pRTmmvlowKg/S220/30842.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_u7jmTj9z2U4/SZ2cmvid9WI/AAAAAAAAABU/F8cmlbAMvHc/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8454386457003410740.post-6537378343837046171</id><published>2009-02-20T08:51:00.000+05:30</published><updated>2009-02-20T12:12:46.564+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகம் 1 அத்தியாயம் 1'/><title type='text'>கடல் புறா - அத்தியாயம் ஒன்று  - இளைய பல்லவன்</title><content type='html'>"காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த* களப் போர் பாடத் திறமினோ" என்று கலிங்கத்து பரணியில், பரணிக்கோர் புலவரான செயங்கொண்டார் தமிழக மகளிரை அறைகூவி அழைத்து, மகளிர் தத்தம் கணவருடன் நடத்திய கலவிப் போரையும் கழற்சென்னியான முதலாம் குலோத்துங்கன் களிங்கத்தின்மீது நடத்திய ஆயுதப் போரையும் செலேடை கொத்துப் பாடியது பல வருஷங்களுக்குப் பின்புதான் என்றாலும், அந்தப் போருக்கு வித்திடுவதற்க்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே காரணமாயிருந்த கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறை, சித்திரா பௌர்ணமியின் அந்திமாலை நேரத்தில் இயற்க்கை வனப்பின் எல்லையை எட்டிக்கொண்டிருந்தாலும், இயற்க்கை வனப்புடன் இணையும் எத்தனை எத்தனையோ செயற்கைக் கஷ்டங்களையும் சுட்டிக்காட்டிக் கொண்டுதானிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலைக் கதிரவன் தன் மஞ்சள் நிறக் கதிர்களை எதிரே இருந்த வங்கக் கடலின் நீலநிற அலைகளின் மீது பாய்ச்சி, மயில்துத்தத்தை தங்கமாக அடிக்கும் ரசவாதியைப்போல, அலைகளின் நிறத்தைப் பொன்னிறமாக மாற்றிக் கொண்டிருந்தாலும் அந்த மாற்றமும் ரசவாதி அகன்றவுடன் மறைந்துவிடும் மாயஜாலத்தைப் போலவே, ஆதவன் மறைய அகன்று அகன்று சிருஷ்டியின் அநித்தியத்தை நிரூபித்துக் கொண்டிருந்தது. அத்தகிரியில் தோன்றி மைஞ்சூரை, பூரணை, பிராநிஹிதை, பேன கங்கை, வேணு கங்கை, இந்தரவதி ஆகிய ஆறு உப நதிகளையும் சேர்த்தணைத்துக் கொண்டதால் பிரும்மாண்டமாகப் பெருகித தொண்ணூறு காத தூரம் ஓடிவந்த களைப்பைப் போக்கிக்கொள்ள *பாலூர்ப் பெருந்துறைக் கருகில் கடற் கணவனுடன் வேகமாக மோதிக் கலந்துவிட்ட புண்ய நதியான கோதாவரியின் வண்டல் கலந்த செந்நிற நீரும் ஆதவனுக்குத் துணை செய்து நீலக்கடலின் நிறத்தை சங்கமப் பகுதியில் சிறிது தங்கமாக மாற்றியது என்றாலும், மாலை நேரக் காற்றால் திரும்பத் திரும்ப எழுந்த பெரும் அலைகள் கோதாவரியின் பொன்னிற நீருக்கும், பழைய மயில் துத்தத்தின் நிறத்தையே அளித்துப் பிற்காலத்தில் இந்தக் கலிங்கத்தின் பொன்னும் மனயும் சூறையாடப்படும், நிலைப்பது மதிப்பற்ற மயில்துத்தம் தான் என்பதை அறிவுறுத்திக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கோதாவரியின் முகத்துவாரத்தை அடுத்தாற்போல் பிரும்மாணடமாக எழுந்த பெரும் கோட்டை மதில்களுக்குப் பின்னாலிருந்த அரண்மனை உப்பரிகை உச்சியில் தெரிந்த கலிங்கத்தின் பெருங்கொடி தனக்கு நிகரில்லையெனக் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தாலும், எதிரே கடலில் நங்கூரம் பாய்ச்சி நின்ற பல நாட்டுக் கப்பல்களின் நங்கூரம் பாய்ச்சி நின்ற பல நாட்டுக் கப்பல்களின் கொடிகள், அலைகளால் உந்தப்பட்ட நாவாய்கள் முன்னும் பின்னும் ஆடியதன் விளைவாக, தங்கள் கொடி மரங்களுடன் முன்னால் முன்னால் சாய்ந்து ‘சீக்கிரம் உனக்குத் தண்டனை இருக்கிறது. ஆணவம் வேண்டாம்’ என எச்சரித்துக் கொண்டிருந்தன. அந்த நாவாய்களிலிருந்து கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வணிகப் படகுகளின் துடுப்புகள் சரேல் சரேலென்று துழாவப்பட்டதாலும் கரையோரம் வந்து இழுக்கப்பட்ட பட்குகளாலும், படகிலிருந்து குதித்த வணிகர்களாலும், கரையோரத்திலும் சற்றுத் தள்ளியும் இருந்த கட்டுமரங்களில் மீன் பிடிக்க மீனவர் வீசிய வலைகள் பலமாகப் பல இடங்களில் இழுக்கப்பட்டதாலும், அந்த பெருந்துறையின் கரையோர நீர் பெரிதும் குழம்பியும் கலங்கியும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் அதிமகாக் குடியேறியதால், தமிழகத்தில் சாதாரணமாக வைக்கப்படும் ஊர்ப் பெயரைப் போல கலிங்கத்தின் அந்தப் பெருந்துறைக்குப் பாலூர் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பெயரைப் ‘பாலூரா’ என்று கிரேக்க வணிகர்களும், அராபியரும், சீனத்தாரும் அழைத்தார்களாதலால் சரித்திரத்தில் ‘பாலூரா’என்றே அந்தத் துறைமுகத்தின் பெயர் நிலைத்து விட்டது. இருப்பினும், பாலுக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தமில்லையென்பதைச் சுட்டிக் காட்ட இஷ்டப்பட்டவன் போல் சித்திரா பெளர்ணமி தினத்தின் அந்த மாலை நேரத்தில் கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்பாகவே தன் பால் நிறத்தை வெளிக்குக் காட்டாமல் ஏதோ பெருங்கோபத்துடன் விழிப்பவன் போல் சிவந்த பந்தாக முழுச் சந்திரனும் மெள்ள வானவெளியில் தோன்றினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்க சூரியன் மறைய முற்பட்டுத் தங்கமதி தலையெடுத்த பின்பு பாலூர்ப் பெருந்துறையின் அழகு முன்னை விடப் பன்மடங்கு அதிகமாகக் கண்ணையும் இதயத்தையும் கவர்ந்தது. அத்துடன் அந்தத் துறைமுகத்தே வேதனையும் கூச்சலுங்கூடக் கலந்துதான் கிடந்தது. அந்த மாலைநேரத்தில் நகரத்துக்குள்ளிருந்து திடீரென வானத்தில் கூட்டமாகப் பறந்து வந்து எதையோ மறந்து வைத்துவிட்டனபோல் வெகுவேகமாகக் கூட்டமாகவே திரும்பிய புள்ளினங்கள் பாடிச் சென்ற இசை காதுக்கு மிக இன்பமாக இருந்ததென்னமோ உண்மை தான். ஆனால், துறைமுகக் கரையில், இழுக்கப்பட்ட படகுகளிலிருந்து பெரும் பொதிகளை இறக்கி மூட்டைகளைத் தோள்மேல் சுமந்து சங்கக் கொட்டடிக்குச் சென்று கொண்டிருந்த ஊழியர் கூட்டம் சுமைகளை ஏற்றிக்கொள்ளப் போட்ட சத்தமும் சுமந்து சென்றபோது போட்ட முனகலும், இன்பமாக இந்தத் துறைமுகத்தில், மாந்தர் துன்ப மூச்சு விடும் காலம் அதிக தூரத்திலில்லையென்பதை அறிவுறுத்தின. அத்துடன் கடற்கரையின் அலை ஓரத்திலிருந்து சற்று தூரத்தேயிருந்த ஒரே ஒரு பெரும் கப்பிச்சாலையில் தென்கலிங்கத்தின் பெரும் மாடுகள் இழுத்துச் சென்ற நானா தேசத்துப் பொதி மூட்டைகளும் பெட்டிகளும் கர்ண கடூரமான சத்தத்தை விளைவித்தன. வண்டிகளில் ஏற்றப்பட்ட பெரும் சுமையைத் தாளாத மாடுகள் விட்ட பெருமூச்சையும், ஆயாசத்தையும் தலைதூக்கிப் பார்த்த கரையோரக் கடல் நாரைகள் ‘குவா குவா’ என்று துன்பப்படுவதைப் பார்த்து மகிழ உலகத்தில் ஜீவராசிகள் என்றும் உண்டு என்பதை நிரூபித்தன.&lt;br /&gt;இப்படி இன்பத்தையும், துன்பத்தையும் கலந்து புகட்டிக் கொண்டிருந்த பாலூர்ப் பெருந்துறை மேல் நாடாரும் கீழ் நாட்டாரும், தூரக் கீழ்த்திசை நாடுகளுக்குச் செல்வதற்கு ஒன்றுகூடும் ஒரே துறைமுகமாதலால், அந்தப் பெருந்துறையில் யவனரும், சீனரும், அராபியரும், தமிழரும், ஆந்திரரும், வடநாட்டாரும் கலந்து காணப்பட்டது என்றும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததல்லாமல், நல்லெண்ணம் மட்டும் இருந்தால் உலகம் ஒன்று கூடுவது சாத்தியன் என்பதௌ வலியுறுத்திக் கொண்டும் இருந்தது. இந்தக் கதை துவங்கும் 1063ஆவது வருடத்துச் சித்திடா பெளர்ணமியன்று வழக்கத்துக்கதிகமாகவே, பல நாட்டு மரக்கலங்கள் அங்கு கூடியிருந்தால் பலதரப்பட்ட வெளிநாட்டவர்கள் கூட்டம் அன்று துறைமுகத்தில் ஏராளமாகி, சிறு உலகம் ஒன்றே அங்கு சிருஷ்டியாகிவிட்டது போன்ற பிரமையை அளித்தது. தட்டை முகமும் மஞ்சள் நிறமும் உள்ள குள்ளச் சீனரும், ஆஜானு பாகுவாய் உஷ்ண பூமியின் விளைவாகக் கன்னிச் சிவந்தச் சிவப்புடன் காணப்பட்ட யவனரும், மொட்டையடித்துத் தலைக்குத் துணிகட்டி, தொள தொளத்த உடைகளுடன் உடைகள் நாலா பக்கமும் காற்றில் அலைய நடந்த சிவந்த மேனியும், திடகாத்திர தேகமும் உள்ள அராபியரும் அதிக உயரமோ அதிகக் குள்ளமோ இல்லாத தமிழகத்தாரும் உயர்ந்தும் கனத்தும் பயங்கரமாக விளங்கிய நீக்ரோவரும் கலந்து நின்ற காட்சி, நவதானியங்கள் கலந்த மங்கலப் பாலிகை போல் அந்தப் பெருந்துறையை விளங்க வைத்தாலும், அந்தப் பாலிகைகளை உடைக்க விரும்பிய அமங்கலத் தூதர்கள் போல் கூட்டங்களை விலக்க முற்பட்ட கலிங்கத்தின் சுங்கக் காவல் வீரர்கள் ‘உம் இப்படி வா! அந்தப் புஏஅம் போகாதே’ என்று ஆணையிட்டு, சுங்கத்திலிருந்து யாரும் தப்ப முடியாதபடி கட்டுப்பாடு செய்து பொதி தூக்கும் ஊழியர்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த விரட்டலுக்குப் பணியாத ஊழியர்களை மென்னியைப் பிடித்துச் சுங்கச் சாவடிகளின் பக்கம் தள்ளவும் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக் காவலர்களிம் கெடுபிடியால் நடந்து கொண்டிருந்த சுங்கச் சோதனையையும், சுங்கச் சாவடிகளின் பக்கம் போக் கோண்டிருந்த சுமை தாங்கிய ஊழியரையும், பெரும் சாட்டைகளைப் பக்கங்களில் சொடேர் சொடேரெனச் சொடுக்கி நீக்ரோவரை விரட்டிக் கொண்டிருந்த அராபியர்களையும், அமைதியாக ஒரே ஒழுங்குடன் ஏதோ படைக்கு அணி வகுப்பவர் போல் சென்று கொண்டிருந்த யவன வணிகரின் கூட்டத்தையும் கவனித்துக் கொண்டே கரைக்கு வந்து படகிலிருந்து தானும் இறங்கித் தன் குதிரையையும் இறக்கிய ஒரு வாலிபன், சற்று நேரம் அலைப் பகுதியிலேயே புரவியுடன் நின்று கடல் பிராந்தியத்தியத்தையும் எதிரேயிருந்த பாலூர் நகரத்தின் பெரும் கோட்டையையும் நீண்ட நேரம் தன் கண்களால் துழாவினான். அந்த வாலிபன் அந்தப் பெருந்துறைக் கரையில் கால் வைத்ததுமே கலிங்கத்துப் போரின் வித்து விதைக்கப்பட்டுவிட்டது என்பதற்குச் சாட்சி சொல்ல இஷ்டப்பட்டன் போல் கடலின் அலைகள் முன்னை விடப் பெரிதாக இரைச்சல் போட்டன. கதிரவன் மறைந்துவிட்டதால் நகருக்குள் ஏற்பட்ட பெரும் விளக்குகளும் தீக்கண்களை விழித்து வந்திருப்பவன் யாரெனப் பார்க்கவும் தொடங்கின. அந்த விளக்குகளில் தீ விழிகளில் நாமும் பங்கு கொள்வது பிசகென நினைத்த சந்திரனும் தனது தங்க நிறத்தை மாற்றிக் கொண்டு வெண்ணிறம் பெற்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கரையில் திடமாகக் காலூன்றி நின்ற அந்த வாலிபனுக்கு வயது இருபத்தொன்றுக்கு மேலிருக்கக் காரணமில்லை. ஆயினும் அவன் கண்களில் விரிந்த ஆராய்ச்சி அவன் முதிர்ந்த அனுபவத்தைத் தெரியப்படுத்தியது. அவன் கன்னத்தில் சற்றே கீரியதுபோல் இருந்த ஒரு வடு அவன் வதனத்தின் அழகைக் குறைப்பதற்குப் பதில் அதற்கு ஒரு வீரக் களையையும் இணையற்ற கம்பீரத்தையுமே அளித்தது. ‘காக பக்ஷகம்’ என்று புராணங்களில் சொல்லப்படுவது போல் காக்கையின் இறகுகளைப்போல் தலையில் விரிந்து கன்னங்களையும் தடவித் தொடங்கிய சுருண்ட அவன் குழல்கள் மட்டுமின்றி அகன்ற நெற்றியும், அதிக வளைவு என்று சொல்ல முடியாதபடி சிறிதே வளைந்து திடீரென பக்கங்களில் கத்திகளைப் போல் கூர்மையுடன் இறங்கிப் புருவங்களும், நன்றாகச் சிவந்து சற்றுத் தடித்தே இருந்த வாயிதழ்களும் அந்த இளைஞன் வீரத்துக்கும் உறுதிக்கும் பெரும் சான்றுகளாயிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கியில் மறைந்த இடம் போக மீதி இடங்களில் வெட்டுக் காயங்களுடன் காட்சியளித்த அவன் நீளமான கரங்களும் தழும்பேறியிருந்த விரல்களும் இளைய பருவத்திலேயே அவன் பெரும் போர்களைக் கண்டவன் என்பதை வலியுறுத்தின. சற்றுக் குறுகிக் காணப்பட்ட அவன் இடையை அடுத்துக் கச்சையிலிருந்து பக்கப் பகுதியில் தொங்கிய வாள் அதிக நீளமில்லையென்றும் உறையின் பரிணாமத்திலிருந்து அதன் அகலம் மிகுதியென ஊகிக்க முடிந்தது. அவன் கச்சையில் வயிற்றுக்கு எதிரில் செருகப்பட்ட சிறுவாளின் பிடியிலிருந்த விலை உயர்ந்த கற்கள் இளைஞன் அப்படியொன்றும் ஏழையில்லயென்பதை விளக்கின. அவன் அங்கியின் முகப்புகளிலிருந்த தங்கச்சரிகை வேலைப்பாடும் இளைஞன் நல்ல பசையுள்ள குடும்பத்தில் பிறந்தவன் என்பதை நிரூபித்தன. உறுதியுடன் மணலில் புதைந்து நின்ற அவன் கால்களின் பெருவிரலொன்று மணலில் பதிந்தி பதிந்து குழி செய்துகொண்டிருந்தது. அதைக்கண்ட கடல் நண்டுகள், கலிங்கத்துக்கு இப்பொழுதே இந்த இளைஞன் குழி தோண்டுகிறானோ என்று பயந்தனபோல் தங்கள் மணல் வளைகளை நோக்கி ஓடி மறைந்தன.&lt;br /&gt;குதிரையின் கழுத்தில், ஒரு கையைப் போட்டுக் கொண்டு நின்ற வண்ணம் கடற்கரைப் பிராந்தியத்தைக் கண்களால் அளவெடுத்த அந்த வாலிபன் கடலின் லாவண்ணியத்தையும், கோதாவரியின் கம்பீரத் தோற்றத்தையும், வெண்மதி அள்ளிச் சொரிந்த வனப்பையும், பல நாட்டுக் கலங்கலில் வந்து சுங்கச்சாவடிக்குச் சென்று கொண்டிருந்த வணிகப் பொருள்களையும் பார்த்துப் பார்த்துப் பிரமை பிடித்து நின்றான். ‘இத்தனை வாணிபமும் இயற்கை வனப்பும் பொருந்திய இந்தத் துறைமுகத்தை, இந்த மாணிக்கத்தை, இழக்க எதற்காகத் தென்கலிங்கத்து மன்னன் பீமனும், வடகலிங்கத்து மன்னன் அனந்தவர்மனும் முயல்கிறார்கள்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட அந்த இளைஞன் நீண்ட பெருமூச்சொன்றை விட்டுவிட்டு, தன் புரவியை இழுத்துக்கொண்டு மெள்ள மெள்ளச் சுங்கச்சாவடிகளை நோக்கி நடக்கலானான்.&lt;br /&gt;அவன் திடமாகவும், சந்தேகமின்றி யாரையும் தகவல் கேட்காமலும் நடந்ததிலிருந்து அவன் பாலூர்ப் பெருந்துறைக்குப் புதியவனல்லவென்பதை ஊகித்துக் கொண்டார்களாதலாலும், அவன் இடையில் தொங்கிய வாளும் ஓரளவு பயங்கரமாயிருந்ததாலும் முகத்திலிருந்த களையும் சற்று எச்சரிக்கை செய்ததாலும், சுங்கக் காவலர்ககூட அவனை எந்தக் கேள்வியிம் கேட்காமலும் தடை செய்யாமலும் விலகி வழி விட்டார்கள்.பலநாட்டவரின் கூட்டத்தோடு கூட்டமாகவும் சில சமயம் சீனரோடும், சில சமயம் யவனரோடும், சில சமயம் அராபியரோடும் தோளுடன் தோள் உராய்ந்து சென்ற அந்த வாலிபன் சுங்கச் சாவடிக்கு வெளியிலேயே குதிரையை நிறுத்திவிட்டுத் தான் மட்டும் சாவடிக்குள் நுழைந்தான்.&lt;br /&gt;பெரும் மண்டபமாகச் சுமார் நூறு தூண்டுகளுடன் பல பகுதிகளாகப் பிரித்துத் தடைகள் வைத்துக் கட்டப்பட்டிருந்த அந்தச் சுங்கச்சாவடியில் சங்கம் வாங்கும் அதிகாரிகள் ஆண்க்காங்கு நின்று பிரயாணிகளின் சரக்குகளுக்கு மதிப்பீடு செய்வதும், சுங்கப் பணம் வாங்கியும், சுங்கம் உத்திரை பதிப்பித்தும் ஊழியம் புரிந்ததால் ஏற்பட்ட ஒலியும், சுங்க மதிப்பீட்டை எதிர்த்து வணிகர்கள் போட்ட கூச்சலும் காதைத் துளைத்துக் கொண்டிருந்தன. அத்துடன் வசூலிக்கப்பட்ட தங்கப் பணங்கள் பாறைகளின் மீது தட்டப்பட்டதாலும், சரக்குடைய வெண்கல இரும்புக் குடங்கள் திடீரென இறக்கப்பட்டதாலும் ஏற்பட்ட உலோக ஒலிகள் மனிதர்களின் பேச்சொலிக்கு ஆதார சுருதி கூட்டின. படகில் வந்த இளைஞன் உள்ளே நுழைந்ததும் அந்தச் சுங்கக் கூட்டத்தையும் அங்கு வசூலிக்கப்பட்ட பெரும் சுங்கத் தொகையையும் பார்த்துக் கொண்டே வணிகரல்லாத பிரயாணிகள் சோதிக்கப்படும் இடத்துக்குச் சென்று தன் இடையிலிருந்த பட்டுப் பையை எடுத்து சுங்க அதிகாரிகளிடம் அளித்துவிட்டு விரலில் இருந்த ஒரு மோதிரத்தை காட்டினான். அந்த மோதிரத்தைக் கண்ட மாத்திரத்தில் மின்னலால் தாக்குண்டவன்போல் பேரதிர்ச்சியும் குழப்பமும் திகிலும் அடைந்த சுங்க அதிகாரி சிலவிநாடிகள் ஸ்தம்பித்து நின்றான். பிறகு அந்த இளைஞன்கொடுத்த பையைச் சோதிக்காமல் திருப்பி அவனிடம் கொடுத்து விட்டு “சற்று இப்படி வாருங்கள்” என்று கையால் சைகை காட்டிக் கொண்டே தன்னிடத்தில் வேறோருவனை இருக்கச் செய்து சாவடியின் கோடியிலிருந்த அறையை நோக்கி நடந்தான். வந்த இளைஞனும் மீண்டும் இடையில் பையைச் செருகிக் கொண்டு, பதிலேதும் பேசாமலும், முகத்தில் எத்தகைய வியப்பும் காட்டாமலும் சுங்க அதிகாரியைத் தொடந்தான்.&lt;br /&gt;அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், “நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்களுக்கு?” என்று பயத்துடன் வினவினான்.&lt;br /&gt;அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், “தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்” என்று கூறி சுங்க அதிகாரியைக் கூர்ந்து நோக்கினான்.&lt;br /&gt;சுங்க திகாரியின் விழிகளில் கோபமே அதிகரித்தது. “விலையைச் சொல்லவில்லை. வேறு மதிப்பைச் சொன்னேன்” என்றான் சுங்க அதிகாரி கோபம் குரலில் உஷ்ணத்துடன் ஒலிக்க.&lt;br /&gt;“வேறு எந்த மதிப்பைக் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று மீண்டும் வினவினான் இளைஞன்.&lt;br /&gt;“இதைச் சிலர்தான் அணிய முடியும்” என்று சுட்டிக் காட்டினான் சுங்க அதிகாரி.&lt;br /&gt;“ஆம்”&lt;br /&gt;“இது பல்லவ ராஜ சின்னம்”.&lt;br /&gt;“இதைப் பல்லவ ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்ற் அணியலாம்”.&lt;br /&gt;“அதையும் நானறிவேன்”&lt;br /&gt;இதைக் கேட்டதும் சுங்க அதிகாரியில் முகத்தில் ஈயாடவில்லை. “அப்படியானால் தாங்க..........?” என்று திணறினான்.&lt;br /&gt;“கருணாகர பல்லவன்”. ஏதோ ஒரு சாதரன விஷயத்தை அறிவிப்பவன்போல் தன் பெயரை அறிவித்தான் அந்த இளைஞன்.&lt;br /&gt;சுங்க அதிகாரிக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த தைரியமும் போய் விட்டது. அவன் இதயத்தில் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகள் மோதின. “இளைய பல்லவரா?” என்று மிதமிஞ்சிய வியப்பும் திகைப்பும் கலந்த குரலில் வினவினான் சுங்க அதிகாரி.&lt;br /&gt;‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டிய கருணாகர பல்லவன், “இனி நான் போகலாமல்லவா?” என்று வினவிக் கொண்டே மெல்ல திரும்பினான்.&lt;br /&gt;“நில்லுங்கள்” என்று அதிகாரியின் குரலைக் கேட்டுத் திரும்பிய இளைய பல்லவனை அருகில் இழுத்த அதிகாரி, “நீங்கள் போக வேண்டிய இடம் எது?” என்று பயத்துடன் வினவினான்.&lt;br /&gt;“கோடியக்கரை கூலவாணிகன் மாளிகை”&lt;br /&gt;”அது நகரத்துக்குள் அல்லவா இருக்கிறது?”&lt;br /&gt;“ஆம்”&lt;br /&gt;“அப்படியானால் இப்போது போக வேண்டாம். அடுத்தாற்போலுள்ள என் இல்லத்தில் தங்கியிருங்கள். நள்ளிரவுக்குப் பின் போகலாம்” என்று மன்றாடினான் சுங்க அதிகாரி.&lt;br /&gt;“இப்போது ஏன் போகக் கூடாது?” என்று சற்று நிதானத்தை இழந்து கேட்டுவிட்டு மீண்டும் போகதுவங்கிய கருணாகர பல்லவன் கையைப் பிடித்து நிறுத்திய சுங்க அதிகாரி கலவரத்துடன் சொன்னான்: “பிடிவாதம் வேண்டாம். சொல்வதைக் கேளுங்கள். ஊருக்குள் சென்றால் நீங்கள் உயிருடன் மீள முடியாது” என்று.&lt;br /&gt;கருணாகர பல்லவன் விழிகளில் வியப்பு மலர்ந்தது. ஆனால் காரணத்தை அதிகாரி மெள்ள மெள்ள விவரிக்கத் தொடங்கியவுடன் அந்த வியப்பு கோபமாக மாறித் தொடங்கவே, தான் இருக்குமிடம் கலிங்கத்தின் சுங்கச் சாவடியென்பதையும், சுற்றும்முற்றும் வீரர்கள் நடமாட்டம் இருக்கிறது என்பதையுங்கூட கவனிக்காமல், “அத்தனைத் துணிவா இந்தக் கலிங்க பீமனுக்கு?” என்று ஆத்திரத்தால் சற்று இரைந்தும் கூவிவிட்டான் கருணாகர பல்லவன். அந்தக் கூச்சல் அதிகாரியின் காதில் மட்டும் விழுந்திருந்தால் இந்தக் காதையின் போக்கும் வேறு திசையில் திரும்பியிருக்கும். ஆனால் விதி யாரை விட்டது? அவன் கூவியது சற்று தூரத்தேயிருந்த இரு வீரர்களின் காதிலும் விழுந்தது. உடனே நிகழ்ந்தது பிரளயம்.&lt;br /&gt;&lt;br /&gt;..........  தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8454386457003410740-6537378343837046171?l=kadalpuraaonnet.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalpuraaonnet.blogspot.com/feeds/6537378343837046171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8454386457003410740&amp;postID=6537378343837046171' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/6537378343837046171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/6537378343837046171'/><link rel='alternate' type='text/html' href='http://kadalpuraaonnet.blogspot.com/2009/02/blog-post_20.html' title='கடல் புறா - அத்தியாயம் ஒன்று  - இளைய பல்லவன்'/><author><name>சாண்டில்யனின் கடல் புறா</name><uri>http://www.blogger.com/profile/06325221355342866226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp2.blogger.com/_u7jmTj9z2U4/SDa6sr08-4I/AAAAAAAAAA4/pRTmmvlowKg/S220/30842.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8454386457003410740.post-4729562399330215839</id><published>2009-02-19T22:53:00.001+05:30</published><updated>2009-02-19T22:56:33.233+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்பு'/><title type='text'>நாட்டுடமையாக்கப்பட்ட சாண்டில்யனின் படைப்புகள்</title><content type='html'>தமிழக அரசு சமீபத்தில் கண்ணதாசன், சுந்தரராமசாமி, சாண்டில்யன் உள்ளிட்டோரின் படைப்புகளை நாட்டுடமையாக்குவதாக அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், டாக்டர் மு.வரதராசனார், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட 28 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டு, அவர்கள் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பு: இதுவரை 95 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா, கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், இராய.சொக்கலிங்கனார், டாக்டர் மு.வரதராசனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலியூர் கேசிகன், எழுத்தாளர் சாண்டில்யன், கோதை நாயகி, சின்ன அண்ணாமலை, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகு சுந்தரம், புலைவர் த.கோவேந்தன், எழுத் தாளர் சுந்தர ராமசாமி, திருக்குறள் மணி நவநீத கிருஷ்ணன், லட்சுமி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜமதக்னி மற்றும் ஜே.ஆர்.ரங்கராஜு ஆகிய 28 தமிழ் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். மேலும், அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;()&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுந்தர ராமசாமி நூல்கள் நாட்டுடைமை குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அவரது குடும்பத்தினரின் அனுமதி பெறாமல் அறிவிப்பு வெளியிடுவது சட்டவிரோதமானது' என, காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.காலச்சுவடு பதிப்பக பதிப்பாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாக தமிழக அரசு இன்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. சுந்தர ராமசாமியின் படைப்புகளின் காப்புரிமையை அரசு பெறுவது பற்றி அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி பெறாமல் அரசு அறிவிப்பது சட்ட விரோதமானது.சுந்தர ராமசாமியின் படைப்புகளை வெளியிடும் உரிமை தற்போது காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டவிரோதமான அரசு அறிவிப்பின் அடிப்படையில் அவர் படைப்புகளை வெளியிட்டு காப்புரிமை சட்டத்தை மீற வேண்டாமென தமிழ் பதிப்பாளர்களை காலச்சுவடு பதிப்பகம் கேட்டுக்கொள்கிறது.அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழுக்கு பங்களித்து வந்த சுந்தர ராமசாமியை எந்த கட்டத்திலும் அங்கீகரிக்காத தமிழக அரசு இப்போது அவர் மறைந்து மூன்று ஆண்டுகளிலேயே அவசரமாக நாட்டுடைமையாக்கத்தை அனுமதி பெறாமல் அறிவித்திருப்பது அரசின் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"காலச்சுவடு' இதழுக்கு நூலகத்தில் தடை விதித்திருக்கும் தமிழக அரசு சுந்தர ராமசாமியின் காப்புரிமையை அபகரித்து "காலச்சுவடு' பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்துடனேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.இவ்வாறு கண்ணன் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கண்ணதாசன் பதிப்பக நிர்வாகி காந்தி கண்ணதாசன் அறிக்கை:&lt;/span&gt;தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் 28 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது தொடர்பான பட்டியலில் கவிஞர் கண்ணதாசன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. கண்ணதாசன் நூல்களை எக்காலத்திற்கும் நாட்டுடைமையாக்குவதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டது இல்லை; ஒப்புக்கொள்ளப் போவதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பட்டியலில் கண்ணதாசன் பெயர் சேர்ப்பது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை எங்கள் குடும்பத்தினரை கலந்து ஆலோசிக்காமல், குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு கூட தெரிவிக்காமல் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.கண்ணதாசன் நூல்களை கண்ணதாசன் பதிப்பகமும், வானதி பதிப்பகமும் மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு மிகப் பரவலாக மக்களிடையே எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணதாசனின் குடும்பத்தினர் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டிய நிலையிலும் இல்லை. தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த தன்னிச்சையான போக்கு தமிழக அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.கண்ணதாசன் புத்தகங்களை எங்களது சொத்தாக வைத்துப் பாதுகாத்து வருகிறோம். இதை தேசியமயமாக்கும் எண்ணம் துளியும் இல்லை. கண்ணதாசன் குடும்பத்தினருக்கு அவரது எழுத்துகளை பாதுகாப்பது எப்படி என்பது தெரியும்; காப்பற்றவும் எங்களால் முடியும். இது தொடர்பாக முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நன்றி்: தினமலர்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8454386457003410740-4729562399330215839?l=kadalpuraaonnet.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalpuraaonnet.blogspot.com/feeds/4729562399330215839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8454386457003410740&amp;postID=4729562399330215839' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/4729562399330215839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/4729562399330215839'/><link rel='alternate' type='text/html' href='http://kadalpuraaonnet.blogspot.com/2009/02/blog-post.html' title='நாட்டுடமையாக்கப்பட்ட சாண்டில்யனின் படைப்புகள்'/><author><name>சாண்டில்யனின் கடல் புறா</name><uri>http://www.blogger.com/profile/06325221355342866226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp2.blogger.com/_u7jmTj9z2U4/SDa6sr08-4I/AAAAAAAAAA4/pRTmmvlowKg/S220/30842.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8454386457003410740.post-7581397605736936059</id><published>2008-10-10T19:54:00.001+05:30</published><updated>2008-10-10T19:54:45.504+05:30</updated><title type='text'>கடல் புறா - முதல் பாகம்</title><content type='html'>&lt;a href="http://kp1of1to37.blogspot.com/"&gt;http://kp1of1to37.blogspot.com/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8454386457003410740-7581397605736936059?l=kadalpuraaonnet.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalpuraaonnet.blogspot.com/feeds/7581397605736936059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8454386457003410740&amp;postID=7581397605736936059' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/7581397605736936059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/7581397605736936059'/><link rel='alternate' type='text/html' href='http://kadalpuraaonnet.blogspot.com/2008/10/blog-post.html' title='கடல் புறா - முதல் பாகம்'/><author><name>சாண்டில்யனின் கடல் புறா</name><uri>http://www.blogger.com/profile/06325221355342866226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp2.blogger.com/_u7jmTj9z2U4/SDa6sr08-4I/AAAAAAAAAA4/pRTmmvlowKg/S220/30842.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8454386457003410740.post-1822128990583938944</id><published>2008-05-27T20:49:00.002+05:30</published><updated>2008-05-27T21:00:03.037+05:30</updated><title type='text'>சாண்டில்யனின் ‘கடல் புறா' -  முகவுரை</title><content type='html'>(சென்னை பல்கலை கழக வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் என். சுப்ரமணியன், எம். ஏ.,. பிஎச்.டி., அளித்த கடல் புறாவிற்கான முகவுரை)&lt;br /&gt;நெடுநாளாகக் `குமுத'த்தில் தொடர் கதையாக வெளிவந்து இப்பொழுது தனிவடிவில் வரும் `கடல் புறா' என்னும் இந்நூலுக்கு முகவுரையொன்று தரவேண்டுமென்று ஆசிரியர் `சாண்டில்யன்' என்னைக் கேட்ட பொழுது இத்தகைய பணிக்கும் எனக்கும் தொடர்பு இருக்க முடியுமா என்று என்னை நானே வினவிக் கொண்டேன். இரண்டு காரணங்களை முன்னிட்டு அத்தகைய தொடர்பில் தவறுமில்லை, அதற்க்கு தேவையுமுண்டு என்று கருதி இம்முகவுரையை எழுதுகிறேன். முதற்கண் வரலாற்று ஆராய்ச்சியை முழுநேரத் தொழிலாக ஏற்றுக்கொன்டுள்ள பல்கலைகழகப் பேராசிரியர்கள் வரலாற்றுப் புதினங்களுக்கு முகவுரை எழுதும் மரபு விரும்பதகாதது என்று அண்மையில் சிலர் கூறியுள்ள கருத்தை நான் ஒப்பவில்லை: அடுத்து நம் நாட்டு வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு நாம் இயற்ற புகும் நவீனங்கள், மேனாட்டில் எழும் அத்தகைய இலக்கியத்தினின்றும் வேறுபட்டிருக்கும் நிலையை வெளிப்படையாகவும் உறுதியாகவும் விளக்க வேண்டும் என்னும் அவா எனக்குச் சில காலமாக உண்டு. இந்நூலுக்கு முகவுரை வழங்குமுகத்தான் அதற்க்காண வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கு இந்நூலாசிரியரிடம் கடப்பாடுடையேன்.&lt;br /&gt;வரலாற்று புதினங்களை ஆக்கும் முற்ச்சி மேனாடுகளில் பல நூற்றாண்டுப் பழமையுடையது; ஆயினும் தமிழ் இலக்கியத்திற்கு அது ஒரு புதுமை என்பதில் சிறிதும் ஐய்யமில்லை; இம்முயற்சி பெருமளவு, இலக்கியச் சுவையுடையோரால் போற்றப்பெருமளவு, வெற்றி கண்டுள்ளது என்பதும் என் கருத்து. தமிழ் மொழியில் இதுகாறும் வெளிவந்துள்ள வரலாற்று நவீனங்கள் பலவற்றுள்ளும் சிலவே நம் இலக்கியத்தில் நின்று நிலவும் தகுதியுடையவை என்றும், அச்சிலவற்றின் முண்ணனியில் நிற்கும் தகுதி `சாண்டில்யன்' அவர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு உண்டும் என்றும் நான் கருதுகிறேன். `கடல் புறா'வின் இலக்கியத் தகுதியைப் பற்றிய விரிவான ஆரய்ச்சி இம் முகவுரையில் வேண்டுவதின்று; ஏனெனில் அத்தகுதி தமிழர்கள் யாவராலும் ஒரு படித்தாகப் போற்றி ஒப்புக்கொள்ளப் பட்டது. என் கருத்தும் அதுவே என்று முதலிலேயே கூறி விடுகிறேன். இது தவிர, இந்நூல் எவ்வளவு தொலைவு வரலாற்றாளர்களால் உண்மையென்று அறுதியிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகலை யொட்டி அமைந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதையே சிறப்புப் பணியாகக் கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;மேலை நாடுகளில் வரலாற்று நவீனங்களை எழுதி மாபெரும் வெற்றி கண்ட பெருங்கலைஞர்களான சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாந்திரே தியூமா, லியோ டால்ஸ்டாய் போன்றோர்க்கு எளிதில் கிடைத்த சாதன வாய்ப்பு நம் நாட்டு வரலாற்று புதினங்களை யாக்குவோர்க்குக் கிடையாமை வருந்தத்தக்க உண்மையாகும்.&lt;br /&gt;இக்கூற்று சிறிது விளக்க வேண்டுவதாகும்.&lt;br /&gt;வரலாற்று நவீனங்களை இயற்ற புகுவோர்க்கு இலக்கிய பயிற்ச்சி இருத்தலோடு பண்டை வரலாற்று நிலையைத் தம் அகக் கண்முன்னே கொணர்ந்து நிறுத்தி அச்சூழ்நிலையில் தமது கதையை அமைத்து, அவ்வமைப்பிற்கேற்ப கதயைப் புனைய வேண்டிய கட்டுப்பாடும் வேண்டும். வரலாற்றுச் சூழ்நிலையில்லாமல், மானிடப் பண்பைப் பொதுப்படையாகச் சமூகச் சூழ்நிலையில் வைத்து இல்லன புனையும் குறிக்கோள் ஒன்றினையே மேற்கொள்ளும் ஆசிரியர்களது படைப்புகள் வெறும் கதைகளாம். இத்தகைய கதைகளை எழுதுவோர்க்கு இலக்கிய பயிற்ச்சியும் கற்பனைத் திறனும் மட்டும் இருந்தால் போதும். இங்ஙனமின்றி, ஆசிரியரால் வரையறுக்கப்படாமல், தானே ஒரு வரையறைக்குட்பட்டு நிற்கும் வரலாற்றுச் சூழ்நிலையில் கதையை அமைத்துவிடும் ஆசிரயரது கற்பனை கட்டுக்கடங்காமல் திரிய முடியாது, வரலாற்றுக் கட்டுக்கு அடங்க வேண்டும். வரலாறு வரையறுக்காத இடங்களில் தமது கற்பனை திறனை காட்டலாமாயினும், இக்கற்பனைகள் வரலாற்று உண்மைகளோடு முரணாகாதவாறு அமைய வேண்டும். ஆதலால் வரலாற்றுக் கதைகளை எழுதுவோர்க்கு வெறுங் கதைகளை யாப்பவர்களைவிட இலக்கிய பொறுப்புணற்ச்சி மிகுதியாக இருத்தல் வேண்டும். ஈதிங்கினமாக, வரலாற்றுக் கதையை எழுதப்புகும் ஆசிரியர் தமது கதை எந்த நாட்டில் எந்தக் காலத்தில் அமைகிறதோ அந்த நாட்டு- அக்காலத்து வரலாற்றைச் செம்மையுறக் கற்று அக்கல்விக்குத் `தக நிற்றல் வேண்டும்'; அதாவது அசோகனை பற்றிய கதையொண்று இயற்றுவாரது நவீனத்தில் விவரிக்கப்பெறும் சமூகச் சூழ்நிலை குப்தர் காலத்து சூழ்நிலையாகவோ, சோழர் காலத்துச் சூழ்நிலையாகவோ இருத்தல் கூடாது; அன்றியும் ஆசிரியர் தம் காலத்துக் கருத்துகளையும் நிலையங்களையும் உணர்ச்சிகளையும் பண்டு ஒருகாலத்துக் கதையிற் புகுத்தக் கூடாது; அத்தகைய நூலில் வரும் கதாபாத்திரங்களின் நடை, உடை, பேச்சு, பாவனை, பிற செயல்கள் யாவையும் கதைக்கேற்ற காலத்தோடு பொருந்தியிருக்க வேண்டும். இப்பொருத்தங்களோடு முரணாகாத வகையில் பிற கற்பனைகள் அமைய வேண்டும். இஃதாயின், வரலாற்று நவீன ஆசிரியர்கள் கதையோடு தொடர்புடைய காலத்து அரசியல் வரலாற்றை மட்டும் அறிந்தார் போதாது. சமூக வரலாற்றின் பல பகுதிகளான கலை, இலக்கியம், பேச்சு, மரபு, நியாயம், உண்ர்ச்சி, அறிவு, ஆற்றல், இயல்பு என்பனவற்றை நன்கு உணர்ந்து கொண்டு அவற்றோடு சிறிதும் மாறுப்டாத வகையில் நூல் யாத்தல் வேண்டும். உதாரணமாக இராசராசன்-1ஐப் பற்றி வரலாற்றுக் கதை எழுதப்புகும் ஆசிரியர், அவரது சைவப்பற்று, கொடைத்திறன், கலையுணர்ச்சி, இலக்கிய ஆதரவு முதலிய பண்புகளோடு, சளுக்கர்களோடு அவர் புரிந்த போர்களில் அவர் மேற்கொண்ட இரக்கமற்ற செயல்களையும் எண்ண வேண்டும். விக்கிரமாதித்தன் என்று புகழ்ப்பெயர் படைத்த இரண்டாம் சந்திர குப்தனைப் பற்றி நூல் இயற்றப் புகுவார் வரலாறு நன்கறிந்துள்ள அவர்தம் பெருமைகளையேயன்றி, அவர் தம் அண்ணன் இறந்ததற்கு μரளவு காரணமாக இருந்ததோடு அவன் இறந்த பின் அவன் மனைவியையே மணந்துகொண்டு அவ்வாட்சியையும் (சுக்ரீவனைப்போல) கைப்பற்றிக் கொண்ட பண்பினையும் நினைவு கூற வேண்டும். இன்றேல் அவ்வாசிரியர் எழுதும் இலக்கியம் உண்மையோடு மாறுபடும்; மாறுபடின் அது வரலாற்று இலக்கியமாகாது.&lt;br /&gt;இவ்வாறு வரலாற்று உண்மையோடு மாறுபடாமல் கதை எழுத வேண்டுமாயின் வரலாற்று உண்மை யாது என்பது முதற்கண் தெரிய வேண்டும். இங்ஙனம் தெரிதற்கு உதவுவனவே வரலாற்றுச் சான்றுகள் என்பன. அச்சான்றுகள் பொதுவாகக் கல்வெட்டுகள், பண்டைய கட்டட இடிகரைகள், நாணயங்கள், இலக்கியம், பிற நாட்டார் கூற்றுகள், கடிதங்கள், நாட்குறிப்புகள் எனப் பலவகைப் படுவனவாம். இவற்றில் வரலாற்றுக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை நுண்மையாகப் புலப்படுத்தக் கூடிய அளவிற்க்குப் பயன்படக் கூடியவை அக்காலத்தே எழுதி&lt;br /&gt;இடப்படும் வாழ்க்கைக் குறிப்புகள் போன்றவையேயாம். இத்தகைய சான்றுகள் மேனாடுகளில் பல உள. தூசிடிடிஸ்(Thocydides), செனபன்(Xenophon), சீசர்(Ceasar), டாசிடஸ்(Tacitus)என்னும் பண்டைய வரலாற்றாசிரியர்களும் ஆங்கிலோ-சாக்ஸன் கிரானிகில்(The Anglo Saxon Chronicle) போன்ற குறிப்புகளும் சான்றுகளாக அமைந்தமையாலேயே கிளாரண்டன்(Clarendon)முதல் கிப்பன்(Gibbon)* ஈறாகப் பல பிற்கால ஆசிரியர்கள் புகழ்பெற்ற வரலாற்று நூல்கலை இயற்ற முடிந்தது. இத்தகைய இலக்கியங்கள் நம் நாட்டில் இல்லாமையால், வரலாற்று** நவீனங்கள் இயற்றப்புகும் நம் ஆசிரியர்கள் நமது கதைகளில் பெரும்பாண்மை இடங்களில் வரலாற்றிற்கு எட்டாத (வரலாறு எட்ட மறுப்ப)தைக் கற்பனையைக் கொண்டு நிரப்ப வேண்டியிருக்கிறது. இது அவர்களால் தடுக்க முடியாதாயினும், இந்நிலைக்குட்பட்ட இலக்கியங்களை வரலாற்று நவீனங்கள் எனல் μரளவே பொருந்தும் என்பது வெளிப்படை. சில மன்னர்களின் பெயர்களும் ஊர்ப்பெயர்களும் மட்டுமே தெரிந்திருந்தால் அவற்றை வைத்துக்கொண்டு பிறவற்றையெல்லாம் கற்பனையால் நிரப்பும் கதைக்கு ஸ்காட்டின் `டாலிஸ்மன்', `ஐவன்ஹோ', லிட்டனின் `பாம்பேநகரத்தின் இறுதி நாள்கள்' போன்ற கதைகளுக்கும் உள்ள வேறுபாடு தெற்றன விளங்கும். அதாவது ரிச்சர்டு-Iஐப்பற்றி ஸ்காட் கூறும் உண்மைகளைப் போன்றவையல்ல, நரசிம்ம பல்லவனைப் பற்றி நம் வரலாற்று இலக்கிய கருத்தாக்கள் கூறுவன. இத்தகைய இலக்கியங்கள் இயற்றுவது குற்றம் என்பது என் கருத்தன்று; அவற்றை வரலாற்றுக் கதைகள் என்று குறிப்பிட வேண்டாம் என்பதே.&lt;br /&gt;இனி, வரலாற்றுச் சான்றுகள் போதிய அளவில் கிடைக்காமையால் அக்குறைப்பாட்டைக் கற்பனைக் காட்சிகளால் நிறைவாக்கும்போது, அவற்றில் பெரும்பாலும் ஆசிரியர்களால் கதாநாயகன் என்று நிர்ணயித்துக் கொள்ளப்படுவோன் காப்பியத்தலைவனைப்போல அமைந்துவிடுவதே மரபாயிருந்து வருகிறது. ஆனால் பண்டைக்கால வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு இயற்றப்பெரும் தற்கால வரலாற்றுக் கதைகள் இத்தகைய குறைபாடுகளின்றும் தப்ப வழியில்லை. அன்றியும் அண்மையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று நவீனங்களிலும் இம்மரபு தொத்தி பரவுவதும் இயல்பாயுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவாங்கூரில் இருந்த வேலுத்தம்பியைப் பற்றி அண்மையில் வெளியான நூல்கள் புகுத்தும் புனை கதைகள் இவ்விரும்பத்தகாத இயல்பினை நன்கு விளக்குகின்றன. இதற்கு மேலும் எடுத்துக்காட்டுகள் வேண்டுவதின்று.&lt;br /&gt;ஆகையால் நமது பண்டைய வரலாற்றை ஆதாரமாக கொண்டு இயற்றப்பெறுவதாகக் கூறிகொள்ளும் கதைகளைப் படிப்பவர்கள் அவற்றை வெறுங் கற்பனைக் கதைகளைப் படிப்பதாகவே நினைத்துக்கொண்டு படித்து மகிழ்ச்சியடைவதே நல்லது என்று தோன்றுகிறது.&lt;br /&gt;இதுகாறும் கூறியவற்றைக் கொண்டு `கடல் புறா'வை ஆராயும்பொழுது மேற்கூறிய இயல்பான குறைபாட்டினின்று இந்நூல் தன்னை முற்றிலும் காத்துக்கொண்டு வரலாற்று உவமைகளுக்குச் சிறிதும் மாறுபடாதவாறு இயற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகும்.&lt;br /&gt;* உதாரணத்திற்காக இவர்களைக் கூறினும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளிலும் மிளிர்ந்த வரலாற்றாசிரியர்களையும் கொள்க.&lt;br /&gt;** பாணனுடைய ஹர்ஷ சரிதம், பில்ஹணர் இயற்றிய விக்ரமாங்க தேவ சரிதம் ஆகிய நூல்களும் வரலாற்றுக் கதாசிரியர்களுக்குப் பயன்படும் அளவிற்குச் சமுதாயப் பண்பை விளக்குவனவாக அமையவில்லை. கல்ஹணர் இயற்றிய காஷ்மீர நாட்டு வரலாறான இராசதரங்கணி தென்னாட்டைப் பற்றியதில்லை. ஆதலால் தமிழ்நாட்டு வரலாற்றுக் கதை எழுதுவோர்க்கு அது பயன்படாது.&lt;br /&gt;இனி இந்நூல் `இளைய பல்லவ'னான கருணாகரத் தொண்டைமானது(கற்பனை கலந்த) வரலாற்றை விவரிக்குமுகத்தான் குலோத்துங்க சோழனது `இளங்கோப் பருவ'த்தைப் பற்றியும் கதையிற் பிணைத்துக் கூறுகின்றது. கீழை சாளுக்கிய மன்னரான ராஜராஜ நரேந்திரரின் புதல்வரான ராஜேந்திரர்-ii (சாளுக்கியர்) என்னும் குலோத்துங்கர்-I (சோழ சாளுக்கியர்) கி.பி1063லிருந்து தாம் ஆட்சியெய்திய *1071வரை எங்கிருந்தார், எத்தகைய செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்னும் கேள்விகளுக்கு இதுகாறும் வரலாற்றாசிரியர்கள் பலவாறாக விடை கூறி வந்துள்ளனர். கீழை சாளுக்கிய ஏழாம் விஜயாதித்தரைச் சோழ மன்னரான வீர ராஜேந்திரர் ஆதரித்தமையால் வேங்கியில் அரசாள இயலாமற்போன குலோத்துங்கர் பஸ்தார் பிரதேசதில் வெற்றி காணும் முயற்சியில் தமது காலத்தை கழித்தார் என்று பேராசிரியர் க.அ.நீலகண்ட சாஸ்திரியார் உள்படப் பல அறிஞர்கள் கூறிவந்துள்ளனர். ஆனால் அவ்விடைக் காலத்தே இளங்கோவான `அபயன்' `பூர்வதேச'மான கீழை நாட்டில் ஸ்ரீ விஜயப் பேரரசோடு பொருது வெற்றி காண்பதில் முனைந்திருந்தமை பல சான்றுகளையும் காய்தல் உவத்தலின்றி ஆய்வோர்க்குப் புலனாம். `பூர்வதேசம்' என்ற கல்வெட்டுகள் குறிக்கும் இடம் பஸ்தார் பிரதேசமன்று, இந்தோ-சீன நாட்டுப் பகுதியான காந்தார நாடே என்று கொள்ளவேண்டிய நிலை இப்பொழுது ஏற்பட்டு உள்ளது. சீனரது வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டும் குலோத்துங்கன் கீழை நாடுகளில் இருந்தமை பெறப்படும். குலோத்துங்கர் என்னும் பெயரின் ஈற்றில் அமைந்து கிடக்கும் `உத்துங்கன்' என்னும் சேர்க்கை மாற விஜயோத்துங்கன், சங்கிராம விஜயோத்துங்கன் முதலிய ஸ்ரீ விஜயப் பட்டப்பெயர்களைப் பின்பற்றியதாம். குலோத்துங்கர் கடாரத்தை வென்றமை மறக்க முடியாத வரலாற்று உண்மையாகி விட்டது. இவ்வெற்றி 1071-க்கு முற்பட்டது. ஆதலால் `கடல் புறா' ஆசிரியர் தமது கதையில் அமைத்துக் கொண்டபடி ஸ்ரீ விஜயத்தை வென்றமைக்கு வரலாற்று ஆதாரம் முற்றிலும் உண்டு.&lt;br /&gt;இனி `கடல் புறா'வைப் படிப்பவர்கள் இந்நூலைக் கொண்டு ஒரு கதையைப் படித்து இன்புறுவதோடு, ஆங்காங்கே ஆசிரியர் திறம்படப் புகுத்தியிருக்கும் அரிய கருத்துக்களையும் கண்டு பாராட்டுவர் என்பது ஒருதலை. இயற்கைக் காட்சிகளையும், மானிடப் பண்பினையும் ஒவ்வோரிடங்களில் மிகையுமின்றி குறையுமின்றி ஆசிரியர் கையாண்டுள்ள இலக்கிய மரபு போற்றத் தக்கதேயாம்; அன்றியும் அது ஆசிரியரது பரந்த ஆய்வுத் திறனைக் காட்டுகிறது. கருத்து எவ்வளவு கோவைப்பட அமைந்துள்ளதோ அவ்வளவு தெளிவாகவும், ஆற்றொழுக்காகவும் அமைந்துள்ளது ஆசிரியரது தமிழ்நடை. படிக்கப் படிக்கத் தெவிட்டாத சுவைமிக்க நூலாக அமைந்துள்ள கடல் புறவை யாவருமே படிதின்புறக்கூடும் என்பது இந்நூலின் முதல் சில பக்கங்களைப் படித்த உடனேயே விளக்கமாகும்.&lt;br /&gt;இவ்வாறு வரலாற்று ஆதாரத்தைக் கொண்டும், அக்கால மரபிற்கும் பிற சமூகச் சூழ்நிலைகளுக்கும் முரணாகாதவாறும் கற்போற்க்குக் கற்கண்டெனச் சுவைக்கும் அழகிய வரலாற்றுப் புதினமொன்றைச் சாண்டில்யன் அவர்கள் தமிழகத்திற்குத் தந்துள்ளார். இந்நூலுக்குத் தமிழ்நூல் கற்போரின் உள்ளமார்ந்த ஆதரவு பெருமளவில் உண்டு என்று முன்பே நிரூபிக்கப்பட்டுவிட்டதாயினும் இத்தகைய இலக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கும் இந்நூலை விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் கட்டுப்பாடு தமிழ் மக்களுக்கு உண்டு. ஆசிரியரையும் அவர்தம் நூலையும் அறிமுகப்படுத்துவது எனது பணியன்று;&lt;br /&gt;*கி.பி1071 மே மாதம் மூன்றாம் நாளை அதிராஜேந்திரரது சித்த மல்லிக் கல்வெட்டால்(கல்வெட்டு 5/1945-46) குலோத்துங்கன் 1071 மே மாதத்திற்கு முன்பு சோழப் பேரரசாட்சியைக் கைபற்றியிருக்க முடியாது என்பது உறுதியாகும்.&lt;br /&gt;`சாண்டில்யன்' தமிழுலகம் அறிந்த பெயர். அவர் எனக்கு இட்ட பணி மூலம் என்னைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்த விரும்பினார் போலும். தமிழிலக்கியம் என்னும் பூங்காவில் இத்தகைய அரிய அழகிய மலர் மேலும் பூத்து நறுமணம் வீசத் தமிழ்த்தாய் அருள் புரிவாளாக.&lt;br /&gt;-ந.சுப்பிரமணியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8454386457003410740-1822128990583938944?l=kadalpuraaonnet.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalpuraaonnet.blogspot.com/feeds/1822128990583938944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8454386457003410740&amp;postID=1822128990583938944' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/1822128990583938944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/1822128990583938944'/><link rel='alternate' type='text/html' href='http://kadalpuraaonnet.blogspot.com/2008/05/blog-post_27.html' title='சாண்டில்யனின் ‘கடல் புறா&apos; -  முகவுரை'/><author><name>சாண்டில்யனின் கடல் புறா</name><uri>http://www.blogger.com/profile/06325221355342866226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp2.blogger.com/_u7jmTj9z2U4/SDa6sr08-4I/AAAAAAAAAA4/pRTmmvlowKg/S220/30842.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8454386457003410740.post-2937107032494706169</id><published>2008-05-23T20:35:00.003+05:30</published><updated>2008-05-24T07:29:46.463+05:30</updated><title type='text'>சாண்டில்யனின் கடல் புறா - பதிவு அறிமுகம்</title><content type='html'>தமிழ் வரலாற்றில் சரித்திரம் படைத்த நாவல்களில் மிக முக்கியமானவை கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனும், சாண்டில்யனின் ‘கடல் புறா'வும்.  இவைகளின் கதைநயம், கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் பாங்கு, வாசகர்களைத் தூண்டும் வண்ணம் திருப்புமுனைகள் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். சிலர் கடல்புறாவை பொன்னியின் செல்வனை விட சிறந்த நாவல் என்றும், சிலர் இரண்டும் சிறந்த நாவல்கள் என்றும், மற்றும் சிலர் பொன்னியின் செல்வனின் கதையம்சம் 'கடல் புறா'வில் குறைவு என்றும் குறிப்பிடுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இவை இரண்டும் தமிழ் நாவல் உலகின் பொக்கிஷங்கள் என்பதில் இரு வேறு கருத்து கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://img508.imageshack.us/img508/6695/kadalpuracl8.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://img508.imageshack.us/img508/6695/kadalpuracl8.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வன் இணையத்தில் &lt;a href="http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp169idx.htm"&gt;இங்கு&lt;/a&gt; படிக்கக் கிடைக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடல் புறா என்ற அரிய பொக்கிஷம் இணையத்தில் கிடைக்கவில்லை. இதை இணையத்தில் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கில் சில நண்பர்களுடன் கலந்தாலோசித்த போது உருவானது தான் இந்த தளம். இதில் படிப்படியாக 'கடல் புறா' நாவலை கொண்டு வர வேண்டுமென்பது தான் நமது நோக்கம். பொது நலமான இந்த நோக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://img395.imageshack.us/img395/2636/ponnisv0.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://img395.imageshack.us/img395/2636/ponnisv0.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னார்வ அடிப்படையில் ஸ்கேன் செய்யப்பட்ட 'கடல் புறா' நாவலை தட்டச்ச விரும்புபவர்கள் எங்களை அணுகவும்.  kadalpuraaonnet@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8454386457003410740-2937107032494706169?l=kadalpuraaonnet.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalpuraaonnet.blogspot.com/feeds/2937107032494706169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8454386457003410740&amp;postID=2937107032494706169' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/2937107032494706169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/2937107032494706169'/><link rel='alternate' type='text/html' href='http://kadalpuraaonnet.blogspot.com/2008/05/blog-post_7232.html' title='சாண்டில்யனின் கடல் புறா - பதிவு அறிமுகம்'/><author><name>சாண்டில்யனின் கடல் புறா</name><uri>http://www.blogger.com/profile/06325221355342866226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp2.blogger.com/_u7jmTj9z2U4/SDa6sr08-4I/AAAAAAAAAA4/pRTmmvlowKg/S220/30842.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8454386457003410740.post-5873671313843852532</id><published>2008-05-23T19:10:00.004+05:30</published><updated>2008-05-23T20:19:06.519+05:30</updated><title type='text'>கடல் புறா -  முன்னுரை</title><content type='html'>இந்தியாவிலேயே இணையற்ற செல்வாக்கையும் செலாவணியையும் பெற்றுள்ள 'குமுதம்' பத்திரிக்கையில் தொடர்கதையாக வந்த 'கடல் புறா' முற்றுப் பெற்றதும் அப்பத்திரிகைக் காரியாலயத்திற்கு வந்த ஏராளமான கடிதங்களில் ஒன்றை எழுதியவர் அதைக் 'காவியப் புறா' என்று குறிப்பிட்டிருந்தார். ஓரு விஷயத்தில் அது உண்மை. ஓரு பெறும் காவியத்தின் அளவுக்கு நீண்டு விட்டது 'கடல் புறா'. மூன்று ஆண்டுகள் ஒரு வாரம் தொடர்ச்சியாக இக்கதை 'குமுத'த்தில் வெளிவந்தது. இக்கதையை எழுத ஆரம்பித்தபோது மூன்று வருடம் ஓட்டும் உத்தேசம் இல்லை எனக்கு. ஆசையும் அவசியமும் கதையை நீட்டிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களைப்பற்றிய வரலாற்று ஆராச்சி நூல்களைப் படித்தபோதும், கல்வெட்டுக்களைப் பற்றிய ஏடுகளைப் புரட்டிய போதும், கடல் கடந்த தமிழர்களைப் பற்றிய குறிப்புகள் எம் மனத்தில் ஆழப் பதிந்தன. திரும்ப திரும்ப அவற்றில் காணப்பட்ட கடாரம் என்ற சொல்லைப் பற்றியே பல நாட்கள் சிந்தித்தேன். 'நல்ல யந்திர வசதியுள்ள இக்காலத்திலேயே கப்பல் பயணம் கஷ்டமாய் இருக்க, எந்த வசதியுமில்லாத காலத்தில் பழந்தமிழர்கள் எப்படிக் கடல் கடந்து சென்று வாணிபம் செய்தார்கள்? ராஜேந்திர சோழனும் மற்ற பிற்காலச் சோழர்களும் எங்கோ இருக்கும் கடாரத்துக்கு மரக்கலங்களைக் கொண்டு சென்று எப்படிப் போர் புரிந்தார்கள்?' என்ற கேள்விகளும் அடிக்கடி சிந்தனையில் எழுந்தன. ஆகவே அந்தக் காலத்துக் கடல் வாணிபம், கடல் போர் இவற்றைப் பற்றி ஆராயத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்ச்சி சுலபமாயில்லை. தமிழில் கிடைத்த விஷயங்கள் சொற்பமாயிருந்தன. 'அந்தக் காலத்தில் எத்தகைய கப்பல்களைக் கட்டினார்கள்? எத்தனை விதக் கப்பல்களைக் கட்டினார்கள்? அவற்றின் உபயோகம் என்ன?' என்பதெற்கெல்லாம் பல ஆங்கில நூல்களையும் வடமொழி நூல்களையும் பார்க்க வேண்டியதாயிற்று. போஜன் எழுதிய 'யுக்தி கல்பதரு' என்ற மரக்கல அமைப்பு நூல்களைப் பற்றிய குறிப்புகளைப் பேராசிரியர் ராதா முகுத் முகர்ஜி தமது "இந்தியன் ஷிப்பிங்" என்ற நூலில் தந்திருக்கிறார். அந்தக் குறிப்புகள் மரக்கல அமைப்பைப் பற்றி எனக்கு பல சூட்சுமங்களை விளக்கின. பிறகு கடாரத்தின் சரித்திரம், சைலேந்திரர்களின் வமிசாவளி, அவர்கள் வரலாறு முதலியவற்றை டாக்டர் மஜும்தாரின் 'ஸ்வர்ணத்வீபம்' என்ற நூலிலிருந்தும், வீரராஜேந்திரன் காலத்தில் எற்பட்ட கடாரப் போரைப் பற்றிய சில குறிப்புகளை திரு. நீலகண்ட சாஸ்திரியார், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், திரு. பி.டி. ஸ்ரீநிவாச அய்யங்கார் இவர்கள் வரலாற்று நூல்களிலிருந்தும் எடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய நூல்களிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் வருமாறு:&lt;br /&gt;"முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அநபாயன் கி.பி.1063-வது வருஷத்திலிருந்து 1070-ம் வருஷம் வரை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலைநிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077-வது வருஷத்தில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலைவன் பெயர் 'தேவகுலோ'. இந்த தேவகுலோ என்ற சொற்கள் குலோத்துங்கனைக் குறிக்கும். "&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவல்களிலிருந்தும், ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்தும், பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும், அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களிலும் கலந்து கொள்வதும் சர்வ சகஜமாக இருந்ததென்பதை அறிந்தேன். ஆகவே அவர்கள் சென்ற கடல் மார்க்கங்கள், அவற்றுக்கு உதவிய மரக்கல வகைகள், போர் முறைகள், இவற்றைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். அவற்றைப் படித்த பின்னர் ஏற்பட்ட வியப்பு அல்ப சொல்பமல்ல. தமிழர் பரம்பரை எத்தனை வீர பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது, எத்தனை அபாயங்களைத் தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவாகத் தெரிந்தன. இந்த அறிவையெல்லாம் எனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையின் விளைவுதான் 'கடல் புறா'.&lt;br /&gt;&lt;br /&gt;'கடல் புறா' கதையைப் புனைய என்னைத் தூண்டிய இலக்கியம் ஜயங்கொண்டாரின் 'கலிங்கத்துப் பரணி'. அதைப் படித்த போது கருணாகரத் தொண்டைமானின் வீரம் மட்டுமல்ல, அவன் கலிங்கத்தில் புரிந்த அட்டூழியங்களும் என் சிந்தனையைத் தூண்டின. என்னதான் போரிட்டாலும் பண்பாடு மிக்க தமிழ்ச் சமுதாயத்தைச் ஒரு தளபதி பயிர்களைக் கொளுத்துவதும், அழிவை எங்கும் விளைவிப்பதும் எப்படிச் சாத்தியம் என்று எண்ணிப் பார்த்தேன். அதை முன்னிட்டுக் கலிங்கத்தின் வரலாற்றையும், வீர ராஜேந்திரன் காலத்தில், தமிழ்-கலிங்க எல்லை விவகாரங்களைப் பற்றியும் ஆராந்தேன். பூசல் பலமாயிருந்தது. அநீதிகளும் சில இழைக்கப்பட்டிருக்கின்றன.பிற்காலத்தில் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மீது இழைத்த கொடுமைக்கு அவை ஏன் காரணமாயிருக்கக் கூடாது என்று யோசித்தேன். அந்த யோசனையையும், குலோத்துங்கன் ஸ்ரீவிஜயப் பயணத்தையும் இணைத்துப் பார்த்ததில் 'கடல் புறா' பிறந்தது. 'கடல் புறா'வைக் 'கலிங்கத்துப் பரணி'யின் சம்பவங்களுக்கு அடிகோலும் நூல் என்று கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'கடல் புறா'வில் கற்பனையைப் பூர்ணமாக ஓட்டியிருக்கிறேன். சுவையான ஒரு கதையை வரலாற்றுக் குறிப்புகளுடன் நுழைத்துச் சலிப்பில்லாமல் மக்கள் படித்து மகிழச் செய்யப்பட்ட பெருமுயற்சியின் விளைவு 'கடல் புறா'. இதன் தரத்தைத் தமிழ் மக்களும் அறிஞர்களும் மதிப்பிடுவார்கள் ஆகையால் நான் மதிப்பிட முயலவில்லை. முயல்வதும் சரியாகாது. சமைத்த பதார்த்தத்தின் பெருமையைச் சமைத்தவனே விவரிப்பது ரசமல்ல. பண்பாடுமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மதிப்பீடு செய்வது அத்தனை எளிதும் அல்ல. சிற்றறிவாளர்களும் பாரபட்சமுள்ளவர்களும் மதிப்பீட்டில் இறங்குவது எத்தனை அசம்பாவிதம் என்பதை சமீபத்தில் வெறொரு சந்தர்ப்பத்தில் கண்டேன். இலக்கிய மேதைகளென்று சொல்லிக் கொள்ளும் சிலர் 'சரித்திரக் கதைகள் இலக்கியமல்ல' என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் 'சரித்திரக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இலக்கியம் எது என்பதிலுள்ள அறிவுக்குறைவென்பதை சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொள்வார்கள். 'சரித்திரம்' என்பது ஆகாயத்திலிருந்து குதித்துவிடவில்லையென்பதும், ஆதியில் வாழ்ந்த சமுதாயத்தைப் பற்றிய குறிப்புத் தொகுதிதான் என்பதையும் புரிந்து கொண்டால், 'சரித்திரக் கதைக்கும் சமூகக் கதைக்கும் உடைகளைத் தவிர அதிக வித்தியாசம் எதுவுமில்லை'யென்பது தெரிய வரும். அடிப்படை உணர்ச்சிகள், ஆசாபாசங்கள் எல்லாம் ஆதிகால முதல் மனிதனுக்கு ஒரே விதமாகத்தானிருக்கின்றன. சரித்திரக் கதைகளில் வீர காதல் ரசங்கள் காரணமாக அவை இலக்கியமல்லவென்றால் புராணங்களும், இதர பெருங் காவியங்களும் அடிபட்டுப் போகும். இராமாயணம், மகாபாரதம், தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாவற்றையுமே தள்ளி விடும்படியாக இருக்கும். ப்ளுடார்க், ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் காற்றில் பறந்து விடுவார்கள். இவர்களெல்லாம் போய் மீதி ஏதாவது நிற்க வேண்டுமென்றால், சாரமில்லாத, விரசமான கதை எழுதுவதல்லாமல் 'இதுதான் இலக்கியம்' என்று எழுதுபவர்களே சொல்லிக்கொள்ளும் கதைகள் தாம் மிஞ்சும். இந்த நிலை ஏற்பட வேண்டாம் என்று ஆண்டவனைப் பிரார்த்திப்போமா? தேவையில்லை. சரக்கில்லாத நூல் மக்களிடம் செலாவணியாவதில்லை. தமிழ் மக்கள் உறுதியுள்ளவர்கள். தகுந்தது எது, தகாதது எது என்பது அவர்களுக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே 'இலக்கியம் எது? இலக்கியம் அல்லாதது எது?' என்ற சர்ச்சை இப்பொழுது தேவையில்லை. பிற்காலத்தில் எது இலக்கியம் என்பது தீர்மாணிக்கப்படும். இப்பொழுது தேவைப்படுவது நூல்கள் பெருகத் துணை செய்யும் விமர்சனம். அப்படி விமர்சனம் செய்பவர்களும் தமிழ் நாட்டில் நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். ஆனால் நாம் ஒரு நூலை எழுதும்போது யாரைத் திருப்தி செய்யவும் எழுதக் கூடாது. நல்லதை எழுத வேண்டும். கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எழுத வேண்டும். நமது நூல்களைப் படிப்பவர்கள் அலுப்புத் தட்டாமால் படிக்கவும், படித்த பின்பு அவர்கள் எண்ணங்களும் அறிவும் உயரவும் விசாலப்படவும் எழுத வேண்டும். இந்த நோக்கங்களுடன் தான் நான் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கடல் புறா சம்பந்தமாக நான் படித்த வரலாற்று நூல்களின் பட்டியலைப் பின்னால் தந்தி ருக்கிறேன். அவற்றிலிருந்து நான் அறிந்த பல உண்மைகளை இந்த நவீனத்தின் ஊடே செலுத்தியிருக்கிறேன். உதாரணமாக 'கப்பல்களில் திசை காட்டும் கருவி நவீன காலத்தியது. வெள்ளையர் கண்டு பிடித்தது' என்று எண்ணுகிறோம். ஆனால் அதை சீனர் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரத்து முன்னூறு வருஷங்களுக்கு முன்பே அறிந்திருந்தார்களென்ற குறிப்பு இருக்கிறது. இப்படி இன்னும் பல குறிப்புகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;'யவனராணி' முடிந்து எட்டு மாத்ங்கள் கழித்துதான் 'கடல் புறா'வைக் 'குமுதத்'தில் துவக்கினேன். அந்த எட்டு மாத ஆராய்ச்சியின் பலனைக் 'கடல் புறா'வில் பார்க்கலாம். தவிர நல்லதொரு கதையையும் பார்க்கலாம். 'யவன ராணி'யைப் போல் 'கடல் புறா'வும் மக்களிடம் பேராதரவைப் பெற்றது. அதைத் தொடர் கதையாகப் பிரசுரித்த 'குமுதம்' ஆசிரியருக்கும், பிரசுரத்தாருக்கும் எனது நன்றி உரித்தாகும். அவர்களிருவரும் எனது நண்பர்கள். அவர்களைப்பற்றி அதிகப்படி எழுதுவது முறையாகாது. இருப்பினும் ஒன்று சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இன்று நான் லக்ஷக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கிறேனென்றால் அதற்குக் காரணம் 'குமுதம்' பத்திரிக்கையின் ஆசிரியர் திரு.எஸ்.ஏ.பி. அண்ணாமலையும் அதன் பிரசுரகர்த்தர் திரு.பி.வி. பார்த்தசாரதியும் பல வகைகளிலும் தொடர்ந்து எனக்களித்த ஆதரவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;'கடல் புறா'வுக்கு ஒரு முகவுரை தேவையென்று நினைத்ததும் என் நினைப்பில் வந்தவர் டாக்டர் என்.சுப்பிரமணியம், எம்.ஏ., பிஎச்.டி. அவர்கள் தான். டாக்டர் சுப்பிரயமணியம் அவர்கள் வரலாற்றில் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்தவர். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர். முகவுரை எழுதித் தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டதும் 'பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் வரலாற்று நூல்களுக்கு முகவுரை எழுதுவது விரும்பத்தக்கதல்லவென்று சில எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள்' என்று கூறினார். 'ஒரு துறையில் சரியாக ஆராய்ச்சி செய்யாதவர்கள் அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்வதுதான் தவறு. விஷயந் தெரிந்தவர்கள் எழுதுவதுதான் விரும்பத்தக்கது. அப்பொழுதுதான் நல்ல இலக்கியம் வளரமுடியும். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரான உங்களைப் போன்றவர்கள்தான் வரலாற்றுப் புதினங்களின் குணதோஷங்களைச் சரியானபடி எடுத்துச் சொல்ல முடியும்' என்றேன். பிறகுதான் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் முகவுரை தர இசைந்தார்கள். அப்பெரியாருக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். இதுவரை என் புத்தகங்களுக்கு நல்லறிஞர்களே முகவுரைகள் எழுதி இருக்கிறார்கள். தமிழகத்தின் இணையற்ற அரசியல் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி, பேராசியர் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் கே.வி.ரங்கஸ்வாமி ஐயங்கார், 'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை ஆகியவர்கள் எழுதியிருக்கிறார்கள். இப்பொழுது பேராசிரியர் டாக்டர் என்.சுப்பிரமணியம், எம்.ஏ., பிஎச்.டி. எழுதியிருக்கிறார். இவர் எழுதித் தந்திருப்பது முகவுரை மட்டுமல்ல, வரலாற்றுப் புதினம் எழுதும் முறை பற்றி விளக்கும் சிறந்த கட்டுரையுங்கூட என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இம் முகவுரையை டாக்டர் என்.சுப்பிரமணியம், எம்.ஏ., பிஎச்.டி. குறுகிய காலத்தில் எழுதிக் கொடுத்தார். 'கடல் புறா'வின் மூன்று பாகங்களையும் மிக விரைவில் படித்து எனக்குத் துரிதமாக முகவுரையும் எழுதிக் கொடுத்ததற்கு நான் மட்டுமல்ல 'வானதி' உரிமையாளர் திரு.ஏ. திருநாவுக்கரசும் கடமைப்பட்டவர். இந்த நாற்பது ரூபாய் (இப்பொழுது ரூ.110) புத்தகத்துக்கு முன்னதாகவே வந்துவிட்ட ஆர்டர்களை நிறைவேற்ற சீக்கிரம் முகவுரை கிடைத்தது எத்தனை உதவி என்பதை நான் சொல்லத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'கடல் புறா' கதையை மக்கள் படித்தாகிவிட்டது. அவர்களை நான் கேட்டுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். ஏத்தனையோ செலவழிக்கும் நீங்கள் 'கடல் புறா' புத்தகத்தையும் வாங்கி உங்கள் வீட்டில் வையுங்கள். அப்படிச் செய்வது எனக்கும் உதவி, பதிப்பாளருக்கும் உதவி. பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கும் பயன் படும் என்று கூறிக் கொண்டு உங்கள் ஆதரவு என்றும் இருக்க வேன்டுமென்றும் வேண்டிக்கொண்டு என் முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மக்கள்!&lt;br /&gt;---&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt; சாண்டில்யன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8454386457003410740-5873671313843852532?l=kadalpuraaonnet.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalpuraaonnet.blogspot.com/feeds/5873671313843852532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8454386457003410740&amp;postID=5873671313843852532' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/5873671313843852532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/5873671313843852532'/><link rel='alternate' type='text/html' href='http://kadalpuraaonnet.blogspot.com/2008/05/blog-post_4147.html' title='கடல் புறா -  முன்னுரை'/><author><name>சாண்டில்யனின் கடல் புறா</name><uri>http://www.blogger.com/profile/06325221355342866226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp2.blogger.com/_u7jmTj9z2U4/SDa6sr08-4I/AAAAAAAAAA4/pRTmmvlowKg/S220/30842.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8454386457003410740.post-2004288654341619480</id><published>2008-05-22T22:44:00.003+05:30</published><updated>2008-05-23T20:19:25.905+05:30</updated><title type='text'>கடல் புறா - நூல் முகப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://img508.imageshack.us/img508/6695/kadalpuracl8.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://img508.imageshack.us/img508/6695/kadalpuracl8.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8454386457003410740-2004288654341619480?l=kadalpuraaonnet.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadalpuraaonnet.blogspot.com/feeds/2004288654341619480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8454386457003410740&amp;postID=2004288654341619480' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/2004288654341619480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8454386457003410740/posts/default/2004288654341619480'/><link rel='alternate' type='text/html' href='http://kadalpuraaonnet.blogspot.com/2008/05/blog-post.html' title='கடல் புறா - நூல் முகப்பு'/><author><name>சாண்டில்யனின் கடல் புறா</name><uri>http://www.blogger.com/profile/06325221355342866226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp2.blogger.com/_u7jmTj9z2U4/SDa6sr08-4I/AAAAAAAAAA4/pRTmmvlowKg/S220/30842.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
